சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சமூகத்தில் கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தற்போதைய இடைவெளி, கோடிக்கணக்கான மக்கள் சந்திக்கும் வறுமை போன்ற நெருக்கடிகளைச் சமாளிப்பது இந்த காலக்கட்டத்தில் மட்டுமில்லாமல், எதிர்காலத்திலும் எதிரொலிக்கலாம் எனத் தெரியவருகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் இந்த நெருக்கடி உண்டாக்கும் சிக்கல் குறித்து அதில் தெளிவாக விளக்கப்பட்டது.
”சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள தரமான சுகாதாரத்திற்கான நிதி தடைகளை நீக்குதல், முறைசாரா பொருளாதாரத்தில் தொழிலாளர்களைச் சென்றடைதல், வேலைகளையும், அதனால் கிடைக்கும் வருமானத்தையும் பாதுகாத்தல், சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, பிற தலையீடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட செயலாக்கங்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆராய்கிறது.
தீநுண்மி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் பாகுபாடு காட்டவில்லை என்றாலும், அதன் விளைவுகள் மிகவும் சீரற்றவை. அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான். மலிவு, தரம், சுகாதாரத்தை அணுகும்திறன் போன்றவை வாழ்வதற்கும், உயிரிழப்பதற்கும் இடையில் இருக்கின்றன.
கரோனாவை ஒருமுகப்படுத்தப்படுவதைத் தவிர்க்குமாறு கொள்கை வகுப்பாளர்களை இந்த அறிக்கை எச்சரிக்கிறது. கரோனாவில் மட்டும் கவனம் செலுத்துவது மலேரியா, காசநோய், ஹெச்.ஐ.வி. / எய்ட்ஸ் ஆகியவற்றால் உயிரிழப்பு அதிகரிப்பதற்கான உதாரணங்கள் பட்டவர்த்தனமாகக் காட்டப்படுகின்றன.
உலக மக்கள்தொகையில் 55 விழுக்காடு (நான்கு பில்லியன் மக்கள்) சமூக காப்பீடு அல்லது சமூக உதவியால் பயன்பெறவில்லை. உலகளவில், வேலையில்லாதவர்களில் 20 விழுக்காடு மட்டுமே வேலையின்மை சலுகைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிராந்தியங்களில் பாதுகாப்பு மிகவும் குறைவாக உள்ளது.
பாதுகாப்பு இடைவெளிகளில் இரண்டு முக்கிய பாதகமான விளைவுகளை கரோனா நெருக்கடிகாட்டியிருக்கிறது.
- முதலாவதாக, இத்தகைய பாதுகாப்பு இடைவெளிகள் மக்கள் உடல்நிலை சரியில்லாத நிலையிலும் வேலைக்குச் செல்லும்படி கட்டாயப்படுத்தலாம்.