ஒருங்கிணைந்த ஜனதா தளத்தின் துணைத் தலைவராக இருப்பவர் பிரஷாந்த் கிஷோர். இவருக்கும் கட்சியின் தலைவர் நிதிஷ் குமாருக்கும் கருத்தின் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்து வந்தன. இச்சூழலில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் பல்வேறு கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
அதற்குப் பின் இம்மசோதாவுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் வழங்கப்பட்டது. இந்த மசோதாவிற்கு எதிராக அஸ்ஸாம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மசோதாவுக்கு ஜேடியு தலைவர் நிதிஸ் குமார் ஆதரவளித்துள்ளார்.