ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கீதா மிட்டல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் பதவியேற்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் இன்று பதவியேற்றார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பங்கஜ் மித்தலுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மக்கள் தொடர்பு துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜம்மு காஷ்மீர், லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பங்கஜ் மித்தல் பதவியேற்றுக்கொண்டார்.
புதிய தலைமை நீதிபதிக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவி பிரமாணம் செய்துவைத்தார். பின்னர், அவருக்கு சின்ஹா வாழ்த்து தெரிவித்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி பிரமாண நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநரின் தலைமைச் செயலாளர் நிதிஷ்வர் குமார் நடத்தினார்.