தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 41 வயது மதிக்கத்தக்க நலமாச கிருஷ்ணா. இவர், தெலங்கான பிரஜா முன்னணி என்ற அமைப்பின் துணைத் தலைவராகவும் உள்ளார். இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர் இவர், மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்தனர்.
இதையடுத்து, இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த அக்டோபர் மாதம், நல்லகுண்டா காவல் நிலையத்தில் இவரது செயல்பாடுகள் குறித்து புகாரளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவரிடமிருந்து தெலங்கானா வித்யார்தி வேதிகா என்ற அமைப்பின் தலைவரான பண்டாரி மத்திலேட்டி குறித்த ஆவணங்களைக் கைப்பற்றினர்.