இது குறித்து நம்மிடம் பேசிய அவர், "நேபாளம் தற்போது எடுத்துள்ள முடிவு இந்தியாவைச் சீண்டும் வகையில் அமைந்துள்ளது. நேபாள அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா சட்டமாக்கப்பட்டால் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளை இந்தியாவுக்கு அந்நாடு திரும்பத் தர முடியாமல் போய்விடும்.
இந்தியாவை இதற்கும் மேலும் நேபாளம் சீண்டாது என்றும், சட்டத்திருத்த மசோதாவை முன்னெடுத்துச் செல்லாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் பிரச்னையைத் தீர்க்கும் என நம்புவோம்.
இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து நேபாளம் தான் நினைத்ததைச் சாதிக்கப் பார்க்கிறது. சீனாவுடனான உறவையும் பலப்படுத்தவும், இந்த யுக்தியின் மூலம் இந்தியாவிடமிருந்து நிலப் பகுதிகளை அடையவும் நேபாளம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் நேபாளம் தனது திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாது. இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் காஸ்லியான கச்சா எண்ணெய் நேபாளத்துக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
தற்போது நடக்கும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, பிரதமர் நரேந்திர மேற்கொண்ட நேபாள பயணம் பயனளிக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.