தமிழ்நாடு

tamil nadu

ஊரடங்கை மீறியதாக யாத்ரீகர்கள்மீது வழக்குப்பதிவு!

By

Published : Apr 22, 2020, 4:00 PM IST

நாந்தேடு: ஊரடங்கை மீறி தங்களது சொந்த ஊருக்கு சென்ற 90 யாத்தீரிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கை மீறியதாக யாத்ரீகர்கள்மீது வழக்குப்பதிவு!
ஊரடங்கை மீறியதாக யாத்ரீகர்கள்மீது வழக்குப்பதிவு!

கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மகாராஷ்டிரா மாநிலம் நந்தேட்டிற்கு வருகைதந்திருந்த சுமார், மூவாயிரத்து 500க்கும் மேற்பட்ட சீக்கிய யாத்ரீகர்கள் அங்கேயே தஞ்சம் அடையம் சூழல் ஏற்பட்டது. யாத்ரீகர்கள் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குருத்வாரா, லாங்கர் சாகிப் குருத்வாரா அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பல்வேறு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. வசிதி இருந்த சிலர் தங்களது சொந்த செலவில் தனி வாகனத்தை அமைத்துகொண்டு தங்களது ஊருக்கு சென்றடைந்தனர்.

ஊரடங்கை மே 3ஆம் தேதிவரை ஊரடங்கை நீட்டிக்கப்பதாக மத்திய அரசு அறிவித்தது, நீண்ட நாட்களாக சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கும் யாத்ரீகர்களை பொறுமை இழக்க செய்தது. இதனால், ஆறு வாகனங்களை தயார் செய்த யாத்ரீகர்கள் கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்துவரும் இந்நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவுசெய்தனர்.

இந்நிலையில், ஊரடங்கை மீறி தங்களது சொந்த ஊருக்கு சென்ற 90 யாத்ரீகர்களை சோதனைச் சாவடியில் நிறுத்திய காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் பார்க்க: உலக பூமி தினம்: கரோனாவை எதிர்க்கும் போராளிகளுக்கு பிரதமர் பாராட்டு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details