டெல்லி : காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. விவசாயிகளும் இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் போராடி வருகின்றனர்.
விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை எதிர்கட்சிகள் தவறாக வழிநடத்துகின்றன என மத்திய அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, முன்னதாக இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் விடுபடவேண்டும் என நாடாளுமன்றத்தில் பேசிய காணொலியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.