காலம் காலமாக பயன்படுத்தி வந்த வழக்கமான சல்பர் வேதியியல் அதிகம் உள்ள பட்டாசுகள் காற்று மாசை அதிகம் ஏற்படுத்துவதாகக் கூறி கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது.
இதைத்தொடர்ந்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் தடை செய்யப்பட்ட பழைய பட்டாசுகளுக்கு பதில் பசுமை பட்டாசுகளை உருவாக்கியது. அது இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு மக்களின் பயன்பாட்டிற்காக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.