சத்தீஸ்கர் மாநிலம், நாராயாணப்பூர், பஸ்டர் மாவட்ட எல்லைகளில் உள்ள அபுஜ்மர் வனப்பகுதியில் மவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்தது.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் படை காவலர்களும், சிறப்பு அதிரடி படையினரும் அந்த வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மவோயிஸ்ட்களின் பயிற்சி முகாம் இருப்பது கண்டறிப்பட்டது.