குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்யை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்தார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்கள் பதவிவகித்த ரஞ்சன் கோகாய் கடந்த நவம்பர் மாதம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், அடுத்த நான்கு மாதத்திற்குள் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் கோகாய், தான் நாளை டெல்லி செல்லவுள்ளதாகவும், பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு இதுகுறித்த கூடுதல் விவரங்களைத் தெரிவிப்பேன் எனக் கூறினார்.