உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அடுத்த வீர்பூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அந்த சிறுவர்களின் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளனர்.
அந்தக் காருக்குள் நான்கு சிறுவர்கள் உள்ளே சென்று கதவினை பூட்டி மாட்டிக்கொண்டனர். இதையடுத்து சுயநினைவின்றி நால்வரும் காருக்குள் மயங்கினர்.
இதற்கிடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வெகுநேரமாகியும் காணவில்லை என்ற பதற்றத்தில் அவரது குடும்பத்தினர் அவர்களை தேடும் முயற்சியில் இறங்கினர்.