தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2020, 1:58 PM IST

ETV Bharat / bharat

சிறுவர்களின் உயிரை பறித்த கார்!

லக்னோ: காருக்குள் விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்களில், இருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இரண்டு பேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

kids-get-locked-in-car-two-die-of-suffocation-in-up
kids-get-locked-in-car-two-die-of-suffocation-in-up

உத்தரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் அடுத்த வீர்பூர் பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அந்த சிறுவர்களின் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய கார் ஒன்றை வாங்கி உள்ளனர்.

அந்தக் காருக்குள் நான்கு சிறுவர்கள் உள்ளே சென்று கதவினை பூட்டி மாட்டிக்கொண்டனர். இதையடுத்து சுயநினைவின்றி நால்வரும் காருக்குள் மயங்கினர்.

இதற்கிடையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் வெகுநேரமாகியும் காணவில்லை என்ற பதற்றத்தில் அவரது குடும்பத்தினர் அவர்களை தேடும் முயற்சியில் இறங்கினர்.

அப்போது சிறுவர்கள் நான்கு பேரும் காரில் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்களில் இருவர் முன்பே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: வீடியோ விவகாரம்: முன்னாள் முதலமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு!

ABOUT THE AUTHOR

...view details