கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கரோனாவா?
16:37 August 14
கேரள விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட உயர் அலுவலர்கள் உள்பட பலருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
திருவனந்தபுரம் (கேரளா): கேரள விமான விபத்து மீட்புப்பணியில் ஈடுபட்ட உயர் அலுவலர்கள் உள்பட பலருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
முன்னதாக, கோழிக்கோடு விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பலருக்கும் கரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்வையிட்ட அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என கேரள சுகாதாரத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இச்சூழலில், சுகாதாரத்துறையினரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், விபத்து நடந்த இடத்தில் சென்று பார்வையிட்ட பினராயி விஜயன் தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதன் காரணமாக, நாளை (ஆகஸ்ட் 15) நடைபெறும் சுதந்திர தின விழாவில், கேரள அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் தேசியக்கொடியை ஏற்றுவார் என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.