தென் மேற்குப் பருவ மழையால் கர்நாடக மாநிலத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் யாதகிரி மாவட்டம், ஹுனாசகி அருகே உள்ள நாராயணப்பூர் கிராமத்தில் கனமழையால் கிருஷ்ணா ஆறு நிரம்பி, வெளியேறி வெள்ளநீர் சூழ்ந்தது. இந்நிலையில் அப்பகுதியில் ஆடுகளை வைத்து மேய்த்துக் கொண்டிருந்த, பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பண்ணா என்பவர், ஆடுகளுடன் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு அங்கு சிக்கிக் கொண்டார்.