தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 1, 2021, 8:04 PM IST

ETV Bharat / bharat

எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்த நட்டா!

டெல்லி: கரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, தனக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நட்டா
நட்டா

கடந்த டிசம்பர் 13ஆம் தேதி, மேற்குவங்கம் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவின் வாகனம் தாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி திரும்பி அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், கரோனா வைரஸ் நோயிலிருந்து குணமடைந்த நட்டா, தனக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, எனக்குத் தார்மீக ஆதரவு அளித்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. நானும், எனது குடும்ப உறுப்பினர்களும் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளோம்.

இந்தச் சவால்மிக்க காலத்தில், எனக்கு ஆதரவு அளித்து அர்ப்பணிப்புடன் செயல்பட்ட எய்ம்ஸ் இயக்குநருக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details