டெல்லி: சீன குடியரசின் 71 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை (அக்.1) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி மற்றும் சீன மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டில், "சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 71ஆவது ஆண்டு நினைவு நாளில் அரசு, வெளியுறவு அமைச்சர் வாங் யி, அரசு மற்றும் அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 1, 1949 அன்று, சீனத் தலைவர் மாவோ சேதுங் கம்யூனிஸ்ட் படைகள் 20 ஆண்டுகால உள்நாட்டுப் போரை வென்ற பின்னர் சீன மக்கள் குடியரசை ஸ்தாபித்ததாக அறிவித்தார்.