கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா வைரஸ் பெருந்தொற்று தீவிரமாகப் பரவிவருகிறது. கோவிட்-19 பெருந்தொற்றைக் கண்டறிதல் சோதனையில் நேற்று மட்டும் 12 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கணக்கிடும்போது மொத்தம் 40 பேர் தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தற்போது 44 ஆயிரத்து 390 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 44 ஆயிரத்து 165 பேர் அவரவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தொற்றின் தாக்கம் வீரியமாகக் கொண்ட 225 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட ஐந்தாயிரத்து 670 பேர் இயல்பான நிலைக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.