நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அலுவலர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஏழாயிரத்து 700 பேருக்கு மேல் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
கரோனாவிலிருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 19ஆம் தேதி 15 சதவீகமாகவும், ஏப்ரல் 26ஆம் தேதி 19.2 சதவீதமாகவும் இருந்தது. தற்போது 24.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றம் ஆகும்.
கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களில் நாம் அயராது உழைக்க வேண்டும். மீட்பு எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.