மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷ்னல் உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், பிரதமரின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 9.1 கோடியும், பல்வேறு மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.12.5 கோடியும் வழங்கியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி பல லட்சம் மக்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை கிடைப்பதற்கு காரணமாக அமைந்த அவர்களின் பங்களிப்பையும் பாராட்டிய அவர், கொடிய வைரஸான கரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா வெற்றி பெறும் என தெரிவித்தார்.