ஜம்மு-காஷ்மீர் காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங் பெயரில் இயங்கும் போலி ட்விட்டர் கணக்கில், காவல் துறைத்தலைவர் (IGP) பசந்த் ரத் புத்தகங்களை வழங்கி, மக்களுக்குத் தன் கடனை அடைத்து வருவதாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
இதற்குப் பதில் ட்வீட் செய்த காவல் துறைத்தலைவர் (IGP) பசந்த் ரத், "தில்பாக் சிங் அவர்களுக்கு வணக்கம். உங்களை நான் தில்லோ என்று அழைக்கலாமா? சரோரே நகரில் பல் மருத்துவக் கல்லூரி அருகே 50 காணி நிலம் வைத்திருப்பது நீங்களா? அந்த நிலம் உங்கள் பெயரில் பதிவிடப்பட்டுள்ளதா?" எனச் சூசகமாகச் சாடினார்.
இதனைக் கண்ட காஷ்மீரிகள் கண்டிப்பாக, காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங்கை தான், அவர் குத்திக்காட்டிப் பேசினார் என்பதைக் கணித்துவிட்டனர்.
இந்நிலையில், இதனை உறுதி செய்யும் விதமாக காவல் துறை அலுவலர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவிட்டுள்ள காவல் துறைத் தலைமை இயக்குநர் (DGP) தில்பாக் சிங், "பினாமி பேரில் நானோ, என் குடும்பத்தாரோ சட்டவிரோதமாக பிசினஸ், நிலம், சொத்து, வைத்திருந்தால், நிரூபித்துக்காட்டுமாறு பசந்த் ரத்திற்கு நான் சவால் விடுகிறேன்" எனக் கூறியுள்ளார்.