நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்போது, "நாட்டில் ஒரு புதிய நிறுவனம் வந்துள்ளது. அது 'அந்தோளன் ஜீவி' (இயக்கத்தால் வாழ்பவர்கள்). போராட்டம் நடக்கும் இடத்திலெல்லாம் அவர்களைக் காணலாம், அது வழக்கறிஞர்கள், மாணவர்கள் அல்லது தொழிலாளர்களின் கிளர்ச்சியாக இருந்தாலும், அவர்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கலாம். அவர்களால் அந்தோளன்' (இயக்கம்) இல்லாமல் வாழ முடியாது, நாம் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.