மத்திய அரசு கோவிட்-19 போன்ற அவசரநிலையைச் சமாளிப்பதற்காக பல அமைச்சகங்களுடன் இணைந்து மூன்று வாரங்கள் நாடு தழுவிய பூட்டுதலுடன் தரப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தை தயார் செய்துள்ளது.
சுகாதாரத் திட்டம்
முதல் கட்டமாக சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கவும், தனிமை வார்டுகள் மற்றும் அவசர சிகிச்சை படுக்கைகள் உள்ளிட்டவைகள் அமைக்க ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது.
இது தவிர கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட இன்னும் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன. இதில் அவசரகால தீர்வு மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் சமூக உறுதிப்பாட்டுத் திட்டங்கள் என பல உள்ளன.
நோக்கம்
அதில் ஃபாஸ்ட் ட்ராக் கோவிட் -19 மறுமொழித் திட்டம் 1இன் ஒரு பகுதியாக, சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டம் என்பது நான்கு ஆண்டுக் கால திட்டமாகும்.
அந்த வகையில் இந்தியாவில் அவசரகால பதில் மற்றும் சுகாதார அமைப்புகள் தயாரிப்பு திட்டம், கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலை தணிப்பதும், இந்தியாவில் பொது சுகாதார தயாரிப்புக்கான தேசிய அமைப்புகளை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதில் முதன்மையானது கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்குள்ளானவர்களை 48 மணி நேரத்தில் அடையாளம் காண்பது. மேலும் பருவக்கால மற்றும் தனிப்பட்ட தடுப்பு நடவடிக்கை ஆகியவைகளை முன்னெடுப்பது.
திட்டத்தின் பல்வேறு கூறுகள்
1) கோவிட்19 வைரஸ் தாக்குதலுக்கு உடனடி தீர்வு
2) தேசிய மற்றும் மாநில அளவிலான மருத்துவ வசதிகளை வலுப்படுத்துவது.
3) தொற்று நோய் ஆராய்ச்சியில் தேசிய நிறுவனங்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கான தளங்களை வலுப்படுத்துதல்.
4) சமூக ஈடுபாடு மற்றும் இடர் தொடர்பு
5) செயல்படுத்தல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு மதிப்பீடு.
6) அவசரக்கால பதில் கூறு