மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக முறையான சமூக இடைவெளியை பின்பற்றி நடத்தப்பட்ட இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றனர்.
அப்போது பேசிய மோகன் பாகவத், "இந்துஸ்தான் என்பது இந்து ராஷ்டிரம் என்று நாங்கள் கூறும்போது, அது அரசியல் அல்லது அதிகார மையத்தை முன்வைத்து கூறப்படும் கருத்தும் இல்லை. சுயாட்சியின் மூலம்தான் இந்துத்துவா, நாட்டின் சுயசார்பைதான் நாங்கள் இந்துத்துவா என்று கூறுகிறோம்.
இந்துத்துவா என்பது நமது அடையாளத்தை வெளிப்படுத்தும் ஒரு சொல். எனவே, இந்துத்துவா என்ற இந்த வார்த்தை 130 கோடி மக்களுக்கும் பொருந்தும்.