இதுகுறித்து அம்மாநிலத்தின் தண்டேவாடா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா கூறுகையில், "டாட்டீ லட்சுமி என்ற முக்கிய நக்சல் பயங்கரவாதி தாமாக முன்வந்து சரணடைந்துள்ளார்.
மாங்காலிர் பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பின் 'சிஎன்எம் மிலிட்டரி ஃபுளடூன்' பிரிவின் தளபதியாக இருந்து அங்குள்ள அனைவரையும் அச்சுறுத்திவந்தார்.
சத்தீஸ்கரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது தண்டேவாடாவில் உள்ள நிலாவாகையில் நடந்த நக்சல் தாக்குதல்கள் உள்ளிட்ட தாக்குதல்களுக்கும் இவருக்கு தொடர்புள்ளது.
மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் மீதான அவநம்பிக்கையினாலும், நக்சல் அமைப்பில் மூத்த தலைவர்களின் நடவடிக்கையையும் பொறுத்துக்கொள்ள முடியாததாலும் டாட்டீ லட்சுமி தண்டேவாடாவில் சரணடைந்தார்" என்றார்.
இதையும் படிங்க : கொள்ளிடம் ஆற்றில் பெண்ணின் மண்டை ஓடு கண்டெடுப்பு
!