தமிழ்நாடு

tamil nadu

இழப்பில் விவசாயிகள், செழிப்பில் இடைத்தரகர்கள்.!

மத்திய, மாநில அரசுகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை அவ்வளவு உதவிகரமாக இல்லாததால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஆயினும் இடைத்தரகர்கள் செழிப்பில் மிதக்கின்றனர்.

By

Published : Nov 27, 2019, 10:31 PM IST

Published : Nov 27, 2019, 10:31 PM IST

Government’s Support Price Turns Sour for Needy Farmers, Mangamoori Srinivas
Government’s Support Price Turns Sour for Needy Farmers, Mangamoori Srinivas

நடப்பாண்டில் அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை ஒவ்வொரு ஆண்டும் இது விவசாயிகளுக்கான ‘புதிய சந்தைப்படுத்தல் ஆண்டாக’ கருதப்பட வேண்டும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த ஆண்டின் சந்தைப்படுத்தல் மற்றும் பண்ணை விளைபொருட்களின் விற்பனை விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு, விளைபொருட்களின் கொள்முதல் விலை அறுவடை காலத்திலிருந்தே மிகவும் குறைவாக உள்ளது.

கிடப்பில் விவசாய திட்டம்
இதன் காரணமாக உற்பத்தியின் தரம் சராசரியை விடக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் வாங்குபவர்களும் இடைத்தரகர்களும் உற்பத்திக்கான மிகக் குறைந்த விலையை மேற்கோள் காட்டுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிரதான் மந்திரி அன்னதாதா அய் சன்ராக்ஸ்ஹான் அபியான் (பி.எம்-ஆஷா)’ என்ற திட்டமும் கூட பெரிதும் உதவவில்லை. சுமார் 22 ஆயிரம் கிராம வேளாண் சந்தைகள் உள்ளன. அவற்றில் மத்திய அரசு மேம்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் அது இன்றுவரை செயல்படுத்தப்படவில்லை.

தாமதம்
சந்தை விலை உறுதிப்படுத்தலின் கீழ் பண்ணை விளைபொருட்களை வாங்குவதற்கு ஏற்ப மத்திய மற்றும் மாநில அரசுகள் பட்ஜெட் இல்லை. ஜூன் மாதத்தில் அறுவடை செய்யப்பட்ட பொருட்கள் செப்டம்பர் மாதத்தில் சந்தையை அடைகின்றன.
இதனால் விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனர் . செப்டம்பர் மாதத்திலிருந்தே ஆதரவு விலையை அமல்படுத்துவது குறித்து தெலங்கானா அரசு ஏற்கனவே மத்திய அரசிடம் முன்மொழிந்தது.

ஆதரவு விலை
இதற்கு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. வேளாண் செலவுகள் மற்றும் விலைகளுக்கான ஆணையம் (சிஏசிபி) தனது சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையில், கடந்த ஆண்டிலும், பல மாநிலங்கள் ஆதரவு விலையினை சரியான வடிவத்தில் பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தி, எண்ணெய் விதைகள், சோளம் மற்றும் பிற தினை விவசாய விளைபொருட்களும் விலை குறைபாடு செலுத்தும் திட்டத்தின் (பி.டி.பி.எஸ்) கீழ் பணம் / திருப்பிச் செலுத்துவதற்கு தகுதியானவர்களாக கருதப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு இது பரிந்துரைத்தது.

திட்டம்- கைவிடல்
மத்தியப்பிரதேச மாநில அரசு ஏற்கனவே இந்த திட்டத்தை செயல்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டியிருந்தது. காரணம், மத்திய பிரதேச வேளாண் சந்தைகளின் இடைத்தரகர்கள் பிபிஒய் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தினர். இது திட்டத்தை ரத்து செய்ய வழிவகுத்தது.
பண்ணை விளைபொருட்களை வாங்குமாறு மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஏனெனில் அவை தான் பொருட்களின் விற்பனை விலையை தீர்மானித்து வருகின்றன. இதற்கு, எண்ணெய் விதைகள், தினைகள், பருப்பு வகைகள் போன்ற சில தானியங்கள் தொடர்பான மொத்த பயிரில் தலா 25 விழுக்காடு வரை தான் வாங்க முடியும் என மத்திய அரசு பதிலளித்துள்ளது.

விவசாயிகளுக்கு சிக்கல்
அரசாங்கம் சுமார் 25 விழுக்காடு பயிரை மட்டுமே வாங்கினால் மீதமுள்ள பயிர்களை சந்தைப்படுத்த வேண்டும். அதற்கு விவசாயிகள் இடைத்தரகர்களை சார்ந்துள்ளனர். இது விவசாயியை ஆழ்ந்த சிக்கலில் தள்ளுகிறது. விவசாயிக்கு உதவ அரசாங்கம் ஒரு வலிமையான திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
சோயா பீன்ஸ், பருப்பு மற்றும் சோளம் உள்ளிட்ட விவசாய பொருட்களையும் மத்திய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். மேலும் பட்ஜெட்டில் நிதி பங்களிப்பு அளிப்பதும் குழப்பத்தில் உள்ளது.

ஏற்றுமதி கொள்கை
நாட்டிற்கு உணவு தானியங்களின் இறக்குமதி அதிகரித்துள்ளது. மறுபுறம் விவசாயி தனது உள்நாட்டு பயிருக்கு சரியான விலையை எப்போது பெற முடியும் என ஏங்குகிறார். 2017ஆம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு (WTO), மொத்த ஏற்றுமதியில் சுமார் 2.3 விழுக்காடு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
அதே நேரத்தில் 1.9 விழுக்காடு பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. ஆக ஏற்றுமதி கொள்கை ஏற்றுமதி தரம் மற்றும் விலையை மேம்படுத்தும் வகையில் கொள்கைகளை வடிவமைப்பது காலத்தின் தேவையாகும். இதன் மூலம் விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்க உதவு முடியும்.

காஷ்மீர் ஆப்பிள் சிக்கல்
விதை, சேமிப்பு மற்றும் பிற வசதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு இது நமக்குத் தேவைப்படும். உற்பத்திக்கு சரியான மற்றும் விரும்பிய விகிதத்தைப் பெற முடியும். ஆப்பிள் போன்ற பழங்களை சிலியில் இருந்து இறக்குமதி செய்கிறோம்.
நினைத்துப் பாருங்கள், காஷ்மீர் போன்ற இடங்களில் ஆப்பிள்களை அறுவடை செய்ய பொருத்தமான காலநிலை உள்ளது. ஆனால் பயிரை வளர்ப்பதில் சாதகமற்ற மற்றும் குறைந்த தரம் காரணமாக, அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

லிச்சி பழங்கள்
அதேபோல், டிராகன்- லிச்சி பழங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இருப்பினும் சீனாவும் ஸ்ரீலங்காவும் நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்கின்றன. ஆனால் இந்தியாவில் இருந்து அல்ல.
ஏற்றுமதி வருவாய் இலக்கு வைக்கப்படாதது மற்றும் தரமான விதைகள், சேமிப்பு வசதிகள் மற்றும் பிறவை நம் விவசாயிகளுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் எப்போதுமே தொடர் கதையாக உள்ளன.

அடிக்கடி விலையேற்றம், விலை சரிவு பிரச்னையில் சி்க்கும் வெங்காயம்

லாபத்தில் இடைத்தரகர்கள்
இதன் விளைவாக உள்நாட்டு பயிர்களை குறைந்த விலையில் வாங்கி, விவசாயிகள் மூலம் பயனடைவது இடைத்தரகர்கள்தான். மேலும் விவசாயிகள் மூலப் பொருட்கள் மற்றும் வங்கிக் கடனை திருப்பி செலுத்த இடைத்தரகர்களைதான் நம்பியிருக்கின்றனர்.
2017ஆம் ஆண்டு அரசாங்கம் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து குவிண்டாலுக்கு ரூ.5,450 என்ற விலையில் வாங்கியது. அதன் பின்னர் நிதியை பொறுத்தமற்ற முறையில் பயன்படுத்தியால் அரசாங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது.

இழப்பில் விவசாயிகள்
இதனால் விவசாய சமூகத்துக்கு தான் இழப்பு ஏற்பட்டது. மேலே குறிப்பிட்ட நடைமுறையை இந்தாண்டிலும் அரசாங்கள் கடைப்பிடித்து வருகின்றன. விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை இடைத்தரகர்களுக்கு நேரடியாக விற்றாலும், அதனை மிக குறைந்த விலைக்கே விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறான அரசின் உறுதியற்ற கொள்கைகள் மற்றும் உழவர் உதவிகளால் இடைத்தரகர்கள் மட்டுமே பயனடைகின்றனர். விவசாயின் தேவைக்கேற்ப கொள்முதல், விற்பனை கொள்கைகளை மறுபரிசீலனை செய்து புதுப்பிக்க வேண்டும்.

விவசாய விளைபொருட்கள்

ஜெய் ஜவான், ஜெய் கிசான்
இதுவே உழவர்களின் வாழ்வின் ஒளியேற்றும். இல்லாவிட்டால் ஒரு வளமான நாட்டையோ அல்லது பாரம்பரியமிக்க பாரதத்தையோ உறுதிப்படுத்த முடியாது.
ஜெய் ஜவான், ஜெய் கிசான்.தேசத்தில் பாதுகாப்பு பலப்பட வேண்டும். அதேசமயம் உணவு உற்பத்தியிலும் தன்னிறைவு அடைய வேண்டும் நோக்கத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அறிமுகப்படுத்திய முழக்கம் இது. அந்த வகையில் ஒவ்வொரு உழவனும் ஒவ்வொரு போர் வீரனுக்கு சமமானவன் தான்.!
கட்டுரையாளர் மங்கமூரி சீனிவாஸ் (Mangamoori Srinivas)

இதையும் படிங்க: ஆயிரம் பள்ளி, கல்லூரிகளில் மாடித்தோட்டம்: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு!

ABOUT THE AUTHOR

...view details