இந்தச் சமூக ஊடக விழிப்புணர்வுப் பரப்புரையை உலக சுகாதார அமைப்பு #SafeHandsChallenge என்ற ஹேஷ்டேக் நேற்று தொடங்கியது. இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகிவருகிறது.
சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதற்கும், கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் இந்தியாவில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று இந்த #SafeHandsChallenge இல்பங்கெடுத்தார். அதனோடு, இந்தச் சவாலில் கலந்துகொள்ளுமாறு கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்திற்கு அவர் அழைப்புவிடுத்திருந்தார்.
இன்று அந்தச் சவாலை ஏற்று அதில் பங்கெடுத்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “#கோவிட்19 பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்பதை உறுதிசெய்வோம்.