போலி ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்ட வலைதளத்தை நடத்தி, தேசியத் தலைநகரான டெல்லியில் வேலைவாய்ப்பு வழங்குவது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் (Ayushman Bharat Yojana), பிரதமா் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் ரூபாய் வரையில், ஏற்படும் மருத்துவச் செலவுகளை இந்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்ட பயனாளிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது ஆகின்ற செலவுகள் மட்டுமல்லாது, அதற்குப் பின்னர் ஏற்படுகிற மருத்துவச் செலவுகளுக்கும் உரிய நிவாரணத்தொகை அளிக்கப்படும்.