தமிழ்நாடு

tamil nadu

மும்பை குடோனில் பயங்கர தீ

மும்பை: மும்பையில் உள்ள ஒரு குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

By

Published : Dec 27, 2019, 11:05 PM IST

Published : Dec 27, 2019, 11:05 PM IST

Fire breaks out at Mumbai godown
Fire breaks out at Mumbai godown

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை புறநகர் பகுதியான குர்லாவில் ரசாயன குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த குடோனில் இன்று (27-12-2019) மாலை 5.35 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பற்றி எரிந்த தீயானது சிறிது நேரத்தில் அங்கிருந்து பிற பகுதிக்கும் பரவ ஆரம்பித்தது.
தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டெரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீயின் தீவிரம் அதிகமானதால், மேலும் சில தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
இறுதியில் 15 தீயணைப்பு வாகனங்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும் தீ விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details