வங்கக் கடலில் உருவான ஃபானி புயல், அதி தீவிரமாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி நகர்ந்தது. இந்தப் புயலானது இன்று கோபால்பூர், புரியின் தெற்கே உள்ள சந்த்பாலி இடையே தற்போது கரையைக் கடந்தது.
மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் ஃபோனி புயல்...!
2019-05-03 11:08:19
புவனேஷ்வர்: ஒடிசாவில் மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் கரையை கடந்த ஃபோனி புயல் மேற்கு வங்கத்தை தாக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காலை 8 மணிக்கு தொடங்கிய புயல் சரியாக 11 மணிக்கு கரையைக் கடந்தது.
புயல் கரையைக் கடக்கத் தொடங்கியபோது, மணிக்கு 245 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. ஒடிசாவில் கரையை கடந்த ஃபோனி புயலானது மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்துள்ளது.
ஃபோனி புயலானது இன்று இரவு 08.30 மணிக்கு மேற்கு வங்கத்தை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டது. மேலும் அனைத்து போக்குவரத்தும் வசதிகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.