கரோனா தொற்று பாதிப்பு டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு 73 ஆயிரத்து 780 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்து 429 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கடந்த ஜூன் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது டெல்லியில் நிலவி வரும் சூழலை மத்திய உள்துறை செயலர் அஜய்குமார் பல்லா ஆய்வு செய்தார்.