நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தினந்தோறும் 50 ஆயிரத்தை தாண்டுகிறது. இருப்பினும் குணமடைவோரின் விகிதமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோருக்கு மீண்டும் கரோனா அறிகுறிகள் எழுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன.
இதனையொட்டி இவர்களுக்காக டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புதிதாக போஸ்ட்-கோவிட் கிளினிக் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.