சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே வென்று படுதோல்வி அடைந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல் காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில தெரிவித்தார். ஆனால் அதனை காங்கிரஸ் செயற்குழு நிராகரித்தது.
மாற்றத்தை நோக்கி செல்கிறதா காங்கிரஸ்?
டெல்லி: தெலங்கானா, டெல்லி மாநிலங்களின் காங்கிரஸ் செயல் தலைவர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டெழ காங்கிரஸ் கட்சி என்ன செய்யபோகிறது என அனைவரிடத்திலும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், தெலங்கானா, டெல்லி மாநிலங்களின் செயல் தலைவர்கள், தங்களின் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர். மேலும், அகிய இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் விரேந்திர ரதோர், அனில் செளத்ரி, ராஜேஷ் தர்மணி, விரேந்திர வசிஸ்ட் ஆகியோரும் தங்களின் பதவிகளிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை கொண்டு வருமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.