டெல்லி பிரயாக்ராஜில் உள்ள துணை ராணுவப் படைகளின் குழு முகாமில் தங்கி பணிபுரிந்தவர் துணை ராணுவப் படை வீரர் வினோத் குமார் யாதவ். இவரது மனைவி விம்லா. இவர்களுக்கு 14 வயது மகன் சந்தீப், 12 வயது மகள் சிம்ரன் ஆகிய இரு பிள்ளைகள் இருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை வினோத் குமார் யாதவ் தனது துப்பாக்கியால் அவரது மனைவி, இரு பிள்ளைகளைச் சுட்டுக்கொன்றார். பின்னர் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.