தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 11, 2020, 3:29 PM IST

ETV Bharat / bharat

தலைமைத் தளபதி பதவி பாதுகாப்புப் படைகளை ஒன்றிணைக்கும் : ராணுவத் தளபதி

டெல்லி: தலைமைத் தளபதி பதவி உருவாக்கம் நாட்டின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட மிகப் பெரிய நடவடிக்கையாகும் என ராணுவ தளபதி எம்.எம்.நரவானே தெரிவித்துள்ளார்.

Army Chief India naravane
Army Chief India naravane

இதுதொடர்பாக தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "முப்படை தலைமைத் தளபதி பதவி உருவாக்கம், நாட்டின் முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் எடுக்கப்பட்ட மிகப் பெரும் நடவடிக்கையாகும்.

அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நீதி, சுதந்திரம், சம உரிமை, சகோதரத்துவம் ஆகியவை எங்களை வழிநடத்தும்.

எதிர்க்காலத்தில் ஏற்படும் போர்களைக் கருத்தில் கொண்டு ராணுவப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

இந்தியாவின் வடக்கு எல்லை அருகே சீனா அதன் ராணுவ கட்டமைப்புகளைப் பலப்படுத்தி வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "வடகிழக்கு எல்லையோரங்களில் நிலவிவரும் சவால்களை எதிர்கொள்ள நாங்கள் தயார். அதிநவீன ஆயுதங்களை அங்கு கொண்டு செல்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க : வீதி மீறல் : சீட்டுக்கட்டாய் சரிந்த அடுக்குமாடி குடியிருப்புகள்!

ABOUT THE AUTHOR

...view details