கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் உதவித்தொகை!
16:05 March 14
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 (கொரோனா) வைரஸ் தொற்று, தற்போது சீனாவுக்கு வெளியே இத்தாலி, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மிக வேகமாகப் பரவிவருகிறது. குறிப்பாக, இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.
மேலும், கோவிட்-19 வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது குறித்து உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நான்கு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வைரஸ் தொற்றை பேரிடராக அறிவிக்க முடிவு செய்துள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.