தமிழ்நாடு

tamil nadu

மனைவிக்கு சீட் கேட்கும் முன்னாள் முதலமைச்சர்!

மும்பை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் மக்களவைத் தேர்தலில் தன் மனைவிக்கு சீட் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

By

Published : Mar 24, 2019, 12:10 PM IST

Published : Mar 24, 2019, 12:10 PM IST

Updated : Mar 24, 2019, 12:46 PM IST

zd


2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றிப்பெற்றது. அதில் நந்தத்(Nandad) தொகுதியில் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் வெற்றிபெற்றார். இந்த முறையும் காங்கிரஸ் மேலிடம் அந்தத் தொகுதியிலேயே சவான் போட்டியிட பரிந்துரைத்தது.

இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சவான், நந்தத் தொகுதியை தன் மனைவியும், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருக்கும் அமீதாவுக்கு கொடுக்க பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு நடந்தத் தேர்தலில் வெற்றிப்பெற்ற மற்றொரு மக்களவை உறுப்பினர் ராஜிவ் சதாவும் இந்தத் தேர்தலில் போட்டியிட மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் மேலிட பொருப்பாளராக இருப்பதாலும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸை வலுப்படுத்த இருப்பதாலும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றார்.

Last Updated : Mar 24, 2019, 12:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details