மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த குழந்தை, கர்ப்பிணி பெண் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாஜகவினர் மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி, மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிக்க மாநில பாஜக தலைவர்கள் சில நாட்களாக முயற்சி செய்துவருகின்றனர். தேவைப்பட்டால், நிச்சயமாக குடியரசுத் தலைவரின் ஆட்சி அங்கு விதிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக தலைவர்களின் தீவிரம் சந்தேகமளிக்கிறது என கூறியுள்ளார்.