ரக்சா பந்தன் நாளை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தில் 14 லட்சம் மக்களுக்கு காவல்துறையினர் முகக்கவசங்களை வழங்கினர். தன்னார்வலர்களுடன் இணைந்து, ராய்கர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் மூலம் மக்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதலே ராய்கர் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வுகளை அம்மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மாதத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருப்பதால், மக்களின் பாதுகாப்புக்காக முகக்கவசங்கள் வழங்கப்பட்டதாக, அம்மாவட்ட எஸ்பி சந்தோஷ் சிங் கூறியுள்ளார். மேலும், ரக்சா பந்தன் (சகோதரர்கள் தினம்) கொண்டாட்டத்தின் அங்கமாக முகக்கவசங்களை மற்றவர்களுக்குப் பரிசளியுங்கள் என்றும் வலியுறுத்தினார்.