தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 16, 2019, 5:15 AM IST

ETV Bharat / bharat

ராக்கி கயிறு கட்டும் சகோதரிகளுக்கு ஆட்டோ ரைடு இலவசம்!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகையன்று ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ சவாரி வழங்கினார்.

ஆட்டோ ரைடு இலவசம்

இந்தியா முழுவதும் சகோதரர்களுக்காக கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை ரக்ஷாபந்தனாகும். இந்நிலையில் சத்தீஸ்கரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான ஜித்தேந்திர காதீக் என்பவர், ரக்ஷாபந்தனன்று அவர் ஆட்டோவில் பயணித்த பெண்கள் அனைவருக்கும் இலவச சவாரிகளை வழங்கினார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "கடந்த ஆறு ஆண்டுகளாக ரக்ஷாபந்தனன்று என் ஆட்டோவில் பெண்களுக்கு இலவச சவாரிகளை வழங்கி வருகிறேன். எத்தனையோ பெண்கள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டுவதற்கு பல தூரம் செல்ல வேண்டியுள்ளது. எனவே எனக்கு ராக்கி கட்டிய தங்கைகளுக்கு ரக்ஷாபந்தன் பரிசாக இதை செய்தேன்" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details