ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையில் பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாத இறுதியில், Short Service Commission எனப்படும் எஸ்எஸ்சியை சேர்ந்த பெண் அலுவலர்களுக்கு நிரந்தர ஆணையத்தை மத்திய அரசு அமைப்பதாகவும், விமானப் படை, பொறியியல், புலனாய்வு உள்ளிட்ட ராணுவத்தின் பத்து பிரிவுகளில் உள்ள பெண் அலுவலர்கள் இந்த ஆணையத்தின் கீழ் வருவார்கள் எனவும் கூறி உத்தரவிட்டது.
அதே வேளை அரசின் அறிவிப்புக்குப் பின்னர் இந்த விவகாரத்தில் எந்த முன்னகர்வும் ஏற்படவில்லை. அரசின் இந்தப் போக்கை உச்ச நீதிமன்றம் வெகுவாக சாடியுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்து மூன்று மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், அணைத்திற்கு உறுப்பினர்கள் நியமனம் நடைபெறாதது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்துருசந்த், கே.எம். ஜோசப் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.