குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து ஆலோசிக்க இன்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமைில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒத்த கருத்துடைய எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2 மணியளவில் நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, சிவ சேனா, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பங்கேற்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, "மத்திய அரசு மக்கள் மத்தியில் வெறுப்பை பரப்புகிறது, மக்களைப் பிளவுபடுத்த முயல்கிறது. இதனால் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பு மக்கள் மத்தியில் நிலவுகிறது. அரசியலமைப்பை குலைக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.