தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 31, 2019, 10:28 PM IST

ETV Bharat / bharat

அயோத்தி வழக்கு; மத்தியஸ்தர் குழு நாளை அறிக்கை சமர்ப்பிக்கிறது!

டெல்லி: அயோத்தி வழக்கை சுமூகமாக தீர்த்து வைப்பதற்காக அமைக்கப்பட்ட மத்தியஸ்தர் குழு, தங்களின் அறிக்கையை நாளை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.

SC

அயோத்தி வழக்கு பல காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இந்த வழக்கை மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இதனை சுமூகமாக தீர்க்க மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பிடமும் பேசி அவர்களின் கருத்துகளை அறிக்கையாக ஜூலை 31ஆம் தேதி சமர்பிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மத்தியஸ்தர் குழு தங்களின் அறிக்கையை நாளை உச்ச நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளது. ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்ளவுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details