தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூரில் 2 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை கடத்திய நபர் கைது!

By

Published : Oct 3, 2019, 8:42 AM IST

இம்பால் : மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கோடி மதிப்பிலான 47 தங்க பிஸ்கட்டுகளை கடத்திய நபரை அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

smuggler caught

மணிப்பூர் மாநிலம் தெங்நவ்பால் (Tengnoupal) மாவட்டத்தில் உள்ள குதங்தபி (Khudengthabi) கிராமத்தில் நேற்று முன்தினம் அம்மாவட்டத்தின் சோதனைச் சாவடியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை சோதனை செய்ததில், 47 தங்க பிஸ்கட்டுகளை ரைப்ஃபல்ஸ் படையினர் கைப்பற்றினர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த நபரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அஸ்ஸாம் ரைப்ஃபல்ஸ் படையினர் நடத்திய விசாரணையில், தங்க கடத்தலில் ஈடுபட்டது, மியன்மர் நாட்டின்(moreh) மோரே என்னும் பகுதியைச் சேர்ந்த ஜெம்தாங் என்பவர் என்று தெரிவந்துள்ளது. அவர் கடத்திவந்த ஏழு கிலோ தங்க பிஸ்கட்டுகள் ரூ. 2 கோடியே 95 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஈடிவி பாரத்தின் பாடலை பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details