மணிப்பூர் மாநிலம் தெங்நவ்பால் (Tengnoupal) மாவட்டத்தில் உள்ள குதங்தபி (Khudengthabi) கிராமத்தில் நேற்று முன்தினம் அம்மாவட்டத்தின் சோதனைச் சாவடியில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக வந்த வேன் ஒன்றை சோதனை செய்ததில், 47 தங்க பிஸ்கட்டுகளை ரைப்ஃபல்ஸ் படையினர் கைப்பற்றினர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்த நபரை கைது செய்து வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.