ஆந்திர மாநிலத்தின் தெலுங்கு நாளிதழான ஆந்திர ஜோதியின் உள்ளூர் பத்திரிகையாளர் கே. சத்யநாராயணா (45). இவர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள எஸ். அனாவரம் கிராமத்தில் நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கமாறு அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி காவல் துறை தலைமை இயக்குநர் கௌதம் சுவாங்கிடம் (Gautam Sawang) உத்தரவிட்டுள்ளார்.