பொதுமக்கள் பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தடுக்கும் முயற்சியில் ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்ட நகராட்சி அலுவலர்கள் புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஒரு கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை பொதுமக்கள் கொண்டுவந்து கொடுத்து அதற்கு பதிலாக இரண்டு கிலோ அரிசியை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அனந்தபுரம் மாவட்டம் குந்தக்கல் பகுதியில் இந்த புதுமையான பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் தலாரி ரங்கைய்யா, மாவட்ட ஆட்சியர் சத்திய நாராயணா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தனர். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சி அலுவலர்களிடம் கொடுத்துவிட்டு இரண்டு கிலோ அரிசியை பெற்றுச்சென்றனர்.