சீனாவில் 'கரோனா வைரஸ்' பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 213ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 'கரோனா வைரஸ்' பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 692ஆக அதிகரித்ததுள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் 'கரோனா வைரஸ்' பரவுவதைத் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக 423 இருக்கைகள் கொண்ட ’ஜம்போ பி 747’ ஏர் இந்தியா விமானம் இன்று டெல்லியிலிருந்து புறப்பட்டது.