பிகார் சட்டப்பேரவையில் மொத்தமாக 243 தொகுதிகள் உள்ளன. இவற்றிற்கு அக்., 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், பிஸ்கோமான் பவன் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக்கொண்டிருந்த சொகுசு கார் ஒன்றில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காருக்குள் சுமார் 74 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. முறையான ஆவணங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர் உட்பட இருவரை கைது செய்துனர்.