தமிழ்நாடு

tamil nadu

புதுச்சேரியில் ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Jun 27, 2020, 3:56 PM IST

புதுச்சேரி: இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் ஒரே நாளில் 87 பேருக்கு கரோனா உறுதி!
87 new corona cases in pondicherry

புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் மோகன் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, "புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், புதுச்சேரியில் 72 நபர்களுக்கும், காரைக்காலில் 15 நபர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி புதுச்சேரி மாநிலத்தில், கரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 619ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே, கரோனாவால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details