கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவப் பணியாளர்களின் பங்கு முக்கியமானதாகும். குறிப்பாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை முறையாக கண்காணித்துக்கொள்வதில், செவிலியர் முதன்மையானவர்களாக உள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர் வேலையை உதறிவிட்டு, அவரவர் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுக்கின்றனர்.
கடந்த சில நாள்களில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட செவிலியர் வேலையிலிருந்து வெளியேறியுள்ளனர். இவர்கள் அனைவரும் மணிப்பூர், திரிபுரா, ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தவர்கள் ஆவர்.