தமிழ்நாடு

tamil nadu

உ.பி.,யில் வாகன விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 11 படுகாயம்

By

Published : Aug 31, 2020, 1:18 PM IST

பஹ்ரைச்: உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் இன்று காலை (ஆகஸ்ட் 31) பயணிகள் வாகனம், லாரி மீது மோதியதில் தொழிலாளர்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்திர பிரதேச சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி - 14 பேர் அனுமதி
உத்திர பிரதேச சாலை விபத்தில் 5 தொழிலாளர்கள் பலி - 14 பேர் அனுமதி

கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். அதன்படி, பிகாரில் இருந்து ஹரியானாவின் அம்பாலா நகருக்கு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​இன்று அதிகாலை 5.30 மணியளவில் உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரச் மாவட்டம் பயாக்பூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரக் மீது பயணிகள் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், தொழிலாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 14 பேர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். அதில், மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details