தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2019, 1:11 PM IST

ETV Bharat / bharat

லாரி மீது மோதிய பேருந்து... இருவர் உயிரிழந்த பரிதாபம்!

பிகார்: 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து லாரி மீது மோதிய விபத்தில் பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

-bus-collides-with-truck-in-bihar

பிகார் மாநிலம் கதிஹார் நகரில் உள்ள முசாபர்பூரிலிருந்து சிலிகுரிக்கு 45 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து டுமர் கிராமத்திற்கு அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை-31 அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தந்த நிலையில், காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து பேருந்தில் பயணம் செய்த ஒருவர் கூறுகையில், ஓட்டுநர் மிகவும் வேகமாக சென்றதாகவும், நடத்துநர் மெதுவாகச் செல்லுமாறு கூறியும் அவர் கேட்காமல் வேகமாகப் பேருந்தை இயக்கியதால் தான் இந்த விபத்து நிகழ்ந்தது எனவும் கூறினார்.

இதையும் படிங்க:கமலேஷ் திவாரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்; இருவர் அதிரடி கைது!

ABOUT THE AUTHOR

...view details